பஞ்சமாதேவியில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

பஞ்சமாதேவியில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

Update: 2024-07-01 13:21 GMT

திருப்பதிக்கு பாத யாத்திரை

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே பஞ்சமாதேவி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து ஆண்டுதோறும் பாதயாத்திரையாக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வருவார்கள்.

அந்த வகையில் 11-ம் ஆண்டாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்ணன் ராமானுஜ தாசர் தலைமையில் பாதயாத்திரையாக திருப்பதிக்கு புறப்பட்டனர்.

இவர்கள் விழுப்புரம், தீவனூர், காஞ்சீபுரம், திருத்தணி வழியாக வருகிற 4-ந்தேதி திருப்பதி செல்வார்கள்.

Tags:    

Similar News