திண்டுக்கல்: 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Update: 2023-11-30 04:38 GMT
சமுதாய வளைகாப்பு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் நகர்ப்புற பகுதியை சேர்ந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலை, வளையல், மாலை, மஞ்சள், குங்குமம், பழங்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை கர்ப்பிணி பெண்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி வழங்கினார். இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் அலுவலர் பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News