வாக்காளர்களுக்கு திமுக நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் !

திமுக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-05 05:58 GMT

பொதுக் கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த தின விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா. சாக்ரடீஸ் தொகுப்புரை ஆற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன், தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட திமுக சார்பில் நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் அருள், தொழிலதிபர் சேவியர்ராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துகுமார், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், சிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News