திமுக இளைஞரணி மாநாடு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

Update: 2023-11-30 04:33 GMT

ஏடிஜிபி அருண் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மாநாட்டிற்கு வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தமிழக சட்டமன்ற ஏடிஜிபி அருண் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, கலெக்டர் கார்மேகம், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News