சேரன்மகாதேவியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நபர்கள் தேர்ந்தெடுப்பு
சேரன்மகாதேவியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்ட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-07-01 09:58 GMT
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. இதற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சந்தனமாரி தலைமை தாங்கினார். இதில் எஸ்டிடியூ நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது , எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுத்து ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.