கலைஞரின் ஆட்சியின் நீட்சியே வெற்றி-கனிமொழி எம்.பி

சங்கரன்கோவிலில் கலைஞரின் ஆட்சியின் நீட்சியே வெற்றி என கனிமொழி எம். பி பேசினார்.

Update: 2024-06-17 11:53 GMT

சங்கரன்கோவிலில் கலைஞரின் ஆட்சியின் நீட்சியே வெற்றி என கனிமொழி எம். பி பேசினார்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் இல்ல மணவிழா மற்றும் திருமலாபுரம் கிளைக் கழக செயலாளர் முருகன் ஆகியோரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளர் கனிமொழி தலைமையிலான திமுகவினர் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தற்போது நடைபெற்ற இந்த திருமணமானது சுயமரியாதை திருமணம் எனவும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் வழிவந்த சுயமரியாதை திருமணம் எனவும் சுயமரியாதை திருமணத்தில் ஆணும் பெண்ணும் சமம் எனவும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை எனவும் தெரிவித்த அவர், ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் தற்போது பட்டப் படிப்பு முடித்து வசதி வாய்ப்பாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு போராடிய இயக்கம் திராவிட இயக்கம் என்றும் அதை முன்னேற்றி காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பேசினார்.

Tags:    

Similar News