உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி ஆர்ப்பாட்டம்
சங்ககிரி அருகே உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு உண்டானது.;
Update: 2024-01-31 08:54 GMT
சங்ககிரி அருகே உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு உண்டானது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு இ.காட்டூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியைச்சேர்ந்த விவசாயி அறிவழகன் என்பவர் அங்குள்ள உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.