சாலையோரத்தில் உள்ள கிணற்றால் அச்சம்

சாலையோரத்தில் உள்ள கிணறுக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-12-08 09:23 GMT

சாலையோரத்தில் உள்ள கிணறுக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொசவம்பாளையத்தில், சாலைஓரத்தில் உள்ள கிணற்றால் விபத்துநேர வாய்ப்புள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரத்தில் இருந்து சூரியகவுண்டம்பாளையம் செல்லும் கொசவம்பாளையத்தில் சாலையின் ஓரத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதியில்லாததால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் செல்லும்போது கும்மிருட்டில் கிணற்றுக்குள்விழ வாய்ப்புள்ளது. ஆகவே, சாலைஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News