சிறைவாசிகள் மறுவாழ்வு நிதி உதவி்

வேலூரில் விடுதலையான சிறைவாசிகள் மறுவாழ்விற்காக நிதி உதவி்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-27 14:20 GMT

 வேலூரில் விடுதலையான சிறைவாசிகள் மறுவாழ்விற்காக நிதி உதவி்கள் வழங்கப்பட்டன.  

விடுதலையான சிறைவாசிகள் மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நிதி உதவி்களை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் விடுதலையான 22 முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி ,வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவரும் சங்கத்தின் தலைவருமான குமாரவேல் பாண்டியன், தலைமை தாங்கி 22 பேருக்கு 5.5 இலட்சம் நிதி உதவியினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நிதி உதவியை பெறும் முன்னாள் சிறைவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் விறந்து விளங்கிட வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளவும் ஆடு, கறவை மாடு வளர்ப்பு , திண்பண்ட கடைகள், பழக்கடைகள், வேளாண்மை காய்கறி கடைகள் போன்ற தொழில்கள் மேற்கொண்டு சமூகத்தில் உயர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்றார். மேலும் முன்னாள் சிறைவாசிகளுக்கு வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட ஜவுளி துணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

Tags:    

Similar News