பழைய டயா்கள் சேமிப்புக் கிட்டங்கில் தீ விபத்து

திண்டுக்கல் அருகே பழைய டயா்கள் சேமிப்புக் கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

Update: 2024-03-02 11:54 GMT

தீ விபத்து

திண்டுக்கல் பிஸ்மி நகரைச் சேர்ந்தவா் சுல்தான். இவருக்கு சொந்தமான பழைய டயா்கள் சேமிப்புக் கிட்டங்கில், வத்தலகுண்டு புறவழிச்சாலையை அடுத்த குட்டியப்பட்டி பகுதியில் உள்ளது. இந்த கிட்டங்கியில் பழைய டயா்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திண்டுக்கல் தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
Tags:    

Similar News