மோட்டாம்பட்டியில் மேம்பாலம் - எம்.எல்.ஏ., திறப்பு

Update: 2023-12-19 07:29 GMT

மேம்பாலம் திறப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கல்வராயன்மலை ஒன்றியம், பாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட மோட்டாம்பட்டி -கூடலுார் இடையே உள்ள ஆற்றின் குறுக்கே ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டபட்டது. புதிய பாலத்தை உதயசூரியன் எம். எல். ஏ., மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார். மேலும் பாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட தும்பை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் திறந்து வைத்தார்.
Tags:    

Similar News