சாத்தான்குளம் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ .ஆா். எம். புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-12-02 11:44 GMT

மிதிவண்டி வழங்கல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ .ஆா். எம். புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளா் டேவிட்வேதராஜ் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய் , மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப், வட்டாட்சியா் ரதிகலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ், கருப்பசாமி, ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேகர குரு டேவிட் ஞானையா ஆரம்ப ஜெபம் செய்தாா்.

ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு, 159 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில், டிஎன்டிடிஏ ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரி தாளாளா் காந்தி ராஜன், பேரூராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள், மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் முத்துமணி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசை சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், முத்துவேல், பிரபு, கோதாண்ட ராமன், ரமேஷ் பிரபு , நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால், மாவட்ட திமுக பிரதிநிதி வேல்துரை உள்பட பலா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் ஜெபசிங் மனுவேல் வரவேற்றாா்.

Tags:    

Similar News