முத்துப்பேட்டையில் காவலர் இல்லம்: அடிக்கல் நாட்டு விழா

Update: 2023-11-10 13:06 GMT
 அடிக்கல் நாட்டு விழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் அடிக்கடி முத்துப்பேட்டைக்கு வந்து தங்கி பாதுகாப்பு பணி செய்ய வேண்டி உள்ளதால் அவர்கள் வந்து தங்குவதற்கு ஏதுவாக தங்கும் இடம் கட்டி தர தமிழக அரசுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழக முதல்வர் இன்று ரூபாய் 11 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் காவலர் தங்கும் இல்லம் முத்துப்பேட்டையில் கட்ட உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காவலர் தங்கும் இல்லம் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News