தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் வீடு புகுந்து தாக்குதல்

தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-02 13:19 GMT

காவல் நிலையம் 

தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று தனது வீட்டு அருகே அமர்ந்திருந்தார். அவ்வழியாகச் சென்ற சிலர் அவரது இரு சக்கர வாகனத்தை தட்டி விட்டு சென்றனர்.

இதனை தட்டி கேட்ட ராஜேஷின் வீடு புகுந்து அவரை தாக்கியதுடன் அவரிடம் இருந்த ரூபாய் 7000 பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது விஷால், ரித்திக், கோகுல், அபிமன்யு உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிந்தனர்

Tags:    

Similar News