மனித உரிமை தினம் - மாநகர பகுதிகளில் பகுதிகளில் மக்கள் சபை

Update: 2023-12-11 01:13 GMT

மக்கள்  சபை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் மக்கள் சபை கூட்டம் நடந்தது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியில் ஆல்செயிண்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து, பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்தார் . இந்தக் கூட்டத்தில் , சங்கீதபுரம் , ஆட்டுமந்தை தெரு , சவேரியார் கோவில் தெரு , மீன்கார தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவில் தெரு ,ஜெனரல் பஜார், பென்சினர்,விஷப்பன் நாயக்கன் பேட்டை, ரங்கநாதபுரம் தெரு, தெரு, முலைக் கொல்லை, தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர். பொதுமக்கள் அளித்த 31 மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

முன்னதாக மேயர் அன்பழகன் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News