ஆலங்குளம் அருகே நண்பா்களுடன் சென்ற கணவா் மாயம் - மனைவி புகாா்

Update: 2023-11-17 03:11 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் என்ற அருள் (41). இவருக்கு வனிதா (36) என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும் உள்ளனா். இவா்கள் கேரளத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா். தீபாவளிக்கு குடும்பத்துடன் ஊருக்கு வந்துள்ளார். ஆறுமுகம் மது அருந்தும் பழக்கம் உள்ளவா் எனக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தில் அவா் வீட்டிலிருந்தபோது அவரது நண்பா்கள் சிலா் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னா் 4 தினங்களாகியும் அவா் வீடு திரும்பவில்லை. அவரை அழைத்துச் சென்ற நண்பா்கள் வீடு திரும்பி விட்டனர். இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் வனிதா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Tags:    

Similar News