குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடநகரம், மேல்ஆலத்தூர், அகரம்சேரி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-19 15:44 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடநகரம், மேல்ஆலத்தூர், அகரம்சேரி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு. குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடநகரம், மேல்ஆலத்தூர், அகரம்சேரி ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன்,ஆய்வு மேற்கொண்டார்.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடநகரம் ஊராட்சி முஸ்லிம் நகர் பகுதியில் 15வது மத்திய நிதிக்குழு மானிய நிதியில் ரூபாய் 5.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை பணிகளையும் ,அம்பேத்கர் நகரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 22.69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பொழுது பக்கவாட்டில் மழை நீர் வெளியேறுவதற்கான கால்வாய்களை சீரான முறையில் அமைக்க வேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புதர் செடிகளை அகற்றி தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News