கல்லூரிக் கனவு திட்டம்
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான கல்லூரிக் கனவு திட்டம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மே 11 காலை 09:00 மணிக்கு நடைபெற உள்ளது
Update: 2024-05-11 01:04 GMT
பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் கல்லூரிப் படிப்பினை தொடர வழிகாட்டும் கல்லூரிக் கனவு திட்டம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் வரும் 11ஆம் தேதி காலை 09:00 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த கல்லூரிக் கனவு திட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் தொழில் நுட்ப கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. எனவே, பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் படிப்பினை தேர்வு செய்யும் பொருட்டு இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.