காஞ்சிபுரம் எம்பி க்கு மாலை அணிவித்து வரவேற்பு !

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்ட ஜி செல்வம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக காஞ்சிபுரம் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Update: 2024-06-13 06:03 GMT
 எம்பி 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்ட ஜி செல்வம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக காஞ்சிபுரம் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வரும் நிலையில்,செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ஜோதி நகர் பகுதியில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல் இதயவர்மன் ஆகியோரின் முன்னிலையில், கேளம்பாக்கம் வருகை தந்த காஞ்சிபுரம் எம்பி செல்வத்திற்கு ஜோதி நகர் திமுக கிளை செயலரும், இளம் தொழிலதிபருமான கே ஏ டி அன்பு மற்றும் மகளிரணி பொறுப்பாளர் தனக்கோடி அன்பு ஆகியோர் சால்வையுடன் ரோஜா மாலை அணிவித்து வரவேற்றதுடன் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News