கண்ணூர் மாரியம்மன் கோவில் திருவிழா

எலச்சிபாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-05-10 01:02 GMT

கண்ணூர் மாரியம்மன் 

எலச்சிபாளையத்தில் உள்ள, பிரசித்திபெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்.30 இரவு 7 மணிக்கு, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த 3ம்தேதி, பூவோடு எடுக்கப்பட்டது. 8 ம்தேதி மாலை விளக்குபூஜை செய்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை 6மணிமுதல் பொங்கல் வைத்தல், பால்குடம், தீர்த்தகுடம், அக்னிகரகம் எடுத்தல், கிடாவெட்டுதல், மாவிளக்குபூஜை, நையாண்டி மேளம், குறவன்குறத்தி ஆட்டம், வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. அம்மன் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று[10] கம்பம் மற்றும் கும்பம் விடுதல், மலர் கிணற்றில் விடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் திருவிழா முடிவடைகின்றது. விழாக்காலத்தில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கண்ணனூர் மாரியம்மன் நண்பர்கள்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News