கணவனுக்காக களத்தில் இறங்கிய மனைவி

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Update: 2024-04-14 06:35 GMT

வாக்கு சேகரிப்பு 

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்துக்கு ஆதரவு கேட்டு அவரது துணைவியார் சிங்கம்புணரி சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்ற முறை இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம், இரண்டாவது முறையாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இருப்பினும் கார்த்திக் சிதம்பரம் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம், வாக்காளர்கள் கேள்வி கணைகளால் தொடுத்து வருகின்றனர். இதனால் திக்கு முக்காடிய நிலையில் திமுக கூட்டணியினர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக, அவரது தந்தை ப.சிதம்பரத்தை தொடர்ந்து, பரதநாட்டிய கலைஞரும், மருத்துவருமான, அவரது மனைவி ஶ்ரீநிதியும் களம் இறங்கியுள்ளார். அவர் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள கடைகள், தெரு வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆகியாேரிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Tags:    

Similar News