சென்னை அருகே தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!!

சென்னை திருநீர்மலை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-07-10 05:41 GMT

 கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம்

சென்னை திருநீர்மலை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. முன்கூட்டியே ஆலையில் இருந்த 20 வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகைமூட்டம் சூழ்ந்தது. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.இந்த தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News