முத்துப்பேட்டை அருகே பெண்ணை தாக்கியவர் கைது

Update: 2023-11-01 08:57 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முத்துப்பேட்டை அடுத்த பெத்த வேளாண் கோட்டகம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரது மனைவி வேம்பு (26) .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார் வேம்புவை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரிடம் வேம்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News