இன்ஸ்டாகிராமில் காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் இன்ஸ்டாகிராமில் காதலித்து பெண்ணை ஏமாற்றியாதல் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-02 04:52 GMT

 காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் காதலித்து ஏமாற்றிய வாலிபர் போக்சோவில் கைது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். தாய் தந்தை மற்றும் தம்பி தங்கை ஆகியோருடன் வசித்து வரும் நிலையில் இளம்பெண்ணின் தாய் பிறந்த வீடான அழிவிடைதாங்கி கிராமத்திற்கு தம்பி மற்றும் தங்கையை கூட்டிக்கொண்டு சென்று விட்டாராம் இந்நிலையில் வீட்டில் தந்தையுடன் இருந்த இளம் பெண் கடந்த மாதம் 17ம் தேதி திடிரென காணவில்லையாம். இதுகுறித்து அனக்காவூர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அனக்காவூர் போலீசார் திருவாரூர் மாவட்டம் குச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன்(19) என்பவர் இன்ஸ்டாகிராமில் காதலித்து இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், இது குறித்து காவல் துறை விசாரணை செய்து கதிரவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News