கலைத்திருவிழா போட்டி- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு 

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடைபெற்ற, கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் பாராட்டினார்.

Update: 2023-10-22 08:43 GMT

மாணவர்களை பாராட்டிய எம்.எல்.ஏ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 18ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.  நிறைவு நாளான வெள்ளிக்கிழமையன்று சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 6 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் ஒரு போட்டிக்கு 2 பேர் வீதம் மொத்தம் 72 பேர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து, பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினர்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், கல்வி புரவலர்கள் அ.அப்துல் மஜீத், தனபால் ஒன்றியக் கவுன்சிலர் சாகுல் ஹமீது, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவசாமி, மீனா சுந்தரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கென்னடி, ஆசிரியர் பயிற்றுநர்கள் நாகரத்தினம், சித்ரா, ஆசிரியர் வீரமணி, உடற்கல்வி ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் நடுவர்களாக பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் கலைப் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News