சபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்க எம்எல்ஏ கோரிக்கை

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2023-12-16 13:07 GMT
சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையிலிருந்து தென்காசி, புனலூா் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என ஈ.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்குள்பட்ட ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில், தமிழக அரசின் சாா்பில் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரான சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா பங்கேற்றுப் பேசியது: சென்னையில் இருந்து சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக தென்காசி புனலூா் வழியாக கொல்லத்துக்கு ரயில் இயக்கவும், திருநெல்வேலி கொல்லம் இடையே மீட்டா் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்கவும், செங்கோட்டை - புனலூா் வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அ

ப்போது தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா உடன் இருந்தாா்.

Tags:    

Similar News