வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம், சரி செய்யும் பணி

கொத்தி மங்கலம் பகுதியில் வாகனம் மோதி சேதமடைந்த மின் கம்பம் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Update: 2024-04-04 17:08 GMT
வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம், சரி செய்யும் பணி

திருக்கழுக்குன்றத்திலிருந்து மாமல்லபுரத்திற்கு, மாற்று மின் வினியோகத்திற்கான, 33 கே. வி. , மின்தடம் உள்ளது. திருக்கழுக் குன்றம் அடுத்த கொத்தி மங்கலம் பகுதியில், இத்தடத்தில் உள்ளமின் கம்பம் ஒன்றின் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கம்பம் உடைந்தது. மாமல்லபுரம் மின் வாரிய ஊழியர்கள், சேதமடைந்த கம்பத்தை, நேற்று அகற்றி புதிய கம்பம் நட்டனர்.

திருப்போரூர் அடுத்த ஆலத்துாரிலிருந்து, மாமல்லபுரம் மின் வினியோகத்திற்கான பிரதான மின் தடம் உள்ளதால், மின் தடங்கல் தவிர்க்கப்பட்டதாக, மின் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். புதிய மின் கம்பம் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது, பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியதில், கொத்திமங்கலம் ஊராட்சி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. ஊராட்சி நிர்வாகம்சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய குழாய் பொருத்தி, குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டது.

Tags:    

Similar News