சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது !

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-15 04:37 GMT

கைது

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை பெரிய கடைவீதியில் நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

இது குறித்து அவர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி (வயது 42) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News