நாகர்கோவில் மாநகர அ.தி.மு.க. பூத் முகவர்கள் கூட்டம்

Update: 2023-11-28 06:50 GMT
அதிமுக கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் மாநகர தெற்கு பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி அமைக்கும் பூத் முகவர்கள் கூட்டம் அதிமுக தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மகளிர் அணி இணை செயலாளருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News