மரியாதை
திருமணம் முடிந்த கையுடன் பெரியார் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காதல் ஜோடி.;
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமலர் (27) கள்ளக்குறிச்சி மாவட்டம் மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27) தங்க மலரும் விக்னேஷும் சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தனர்.அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு வந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து பெற்றோருடன் மணமக்கள் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.