மயிலாடுதுறையில் தேர்தலுக்கான அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-29 17:26 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹீராஜ் ஹச் பகதே, தேர்தல் செலவீன பார்வையாளர் எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா , கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செல்வம் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திரு.முத்துவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News