திருச்செந்தூரில் குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

திருச்செந்தூரில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

Update: 2024-01-08 15:28 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் சண்முகம் (48). இவர் நேற்று திருச்செந்தூரில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றார்.

அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News