சாலை விபத்தில் ஒருவர் பலி - இருவர் மருத்துவமனையில் அனுமதி

இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-12 11:38 GMT
விபத்தில் ஒருவர் பலி
மானாமதுரை அருகே உள்ள பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன்கள் ராஜா (வயது 19), திவாகரன் (வயது 15), மற்றும் விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி மகன் அய்யனார் (வயது 15), 3 பேரும் டூவீலரில் சிவகங்கை ரோட்டில் சென்ற போது பிராந்தமங்கலம் அருகே எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதியதில் 3 பேரும் காயமடைந்தனர்‌. இதில் திவாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News