கரூரில் ஜூன் 21 இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21 இல் நடைபெறும் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

Update: 2024-06-12 16:28 GMT

 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 2024 மதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, கரூரை அடுத்த வெண்ணைமலையில், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெறலாம்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள், தங்களுடைய சுயவிவர குறிப்பு, கல்விச்சான்று,ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் எனவும், இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை யளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் இளைஞர்கள் www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இந்த முகாம் முற்றிலும் இலவசமானது எனவும், மேலும் விவரங்களுக்கு 04324 223555 மற்றும் 97891 23085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News