ஓய்வூதிய நல சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-20 12:41 GMT

ஓய்வூதிய நல சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம் நலச்சங்கம் சார்பில் பென்ஷன்தாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை லேடி டோக் கல்லூரி எதிரே உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை இ பி எஸ் 95 பென்சன் தாரர்கள் சார்பில் ஓய்வூதியர் நலச் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இபிஎஸ் 95 பென்ஷன் தரர்களின் டென்ஷனை 3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். பென்ஷன் தாரர்களுக்கு இ எஸ் ஐ வசதியை வழங்கிட வேண்டும். கேரள அரசை போல் பென்சன் தாரர்களுக்கு 1600 வழங்க வேண்டும். தனியார் துறை பென்ஷன் தாரர்களின் பென்சனை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தினால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News