அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் விலை மிதிவண்டி வழங்கல்

கரூர் அருகே அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் விலை மிதிவண்டி வழங்கபட்டது.

Update: 2024-02-16 16:45 GMT

மிதிவண்டி வழங்கல்

 தமிழக அரசின் கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விளையாட மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னம்மா நாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ -மாணவியர், இருபால் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News