ராமநாதபுரம் பெற்றோர்களை வணங்கும் விழா

ராமநாதபுரம் கீழக்கரை பள்ளியில் குழந்தைகள் பெற்றோரை போற்றி வணங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-02-26 05:04 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனபோகார சங்கம் சார்பில் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோரை போற்றி வணங்கும் விழா பொதுச் செயலாளர் நாகு என்ற நாகராஜன் தலைமையில் பள்ளியின் தாளாளர் கார்த்திக் மற்றும் கல்வி கமிட்டி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பிள்ளையின் மீது வைத்திருக்கும் அன்பையும் பிள்ளைகள் பெற்றோர்களின் அன்பை உணர்த்தும் வகையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2 வது வார்டு கவன்சிலர் ஜெயலெட்சுமி , முதுகலை ஆசிரியர் எஸ்தர் செந்தில்குமார், பேராசிரியை விசாலாட்சி அன்பு கருப்பையா , ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். லயன்ஸ் கிளப் பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் செய்திருந்தனர். சுந்தரபாண்டி , அழகர்சாமி ,காசிநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News