ராணிப்பேட்டையில் 33 போலீசார் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-06-29 11:27 GMT

ராணிப்பேட்டை எஸ்பி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 33 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவேரிப்பாக்கத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அரக்கோணத்திற்கும்,

ரத்தினகிரியில் பணியாற்றி வந்த சீனிவாசன் கொண்டபாளையத்திற்கும், கொண்டபாளையத்தில் பணியாற்றிய ரகு ஆற்காடு டவுன் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக்காவலர்கள் மற்றம் போலீசார் உள்பட 33 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்பி கிரண்ஸ்ருதி பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News