குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதவித்தொகை வழங்கல்

குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதவித்தொகை வழங்கினார்.

Update: 2024-07-01 14:52 GMT

கல்வி உதவி தொகை வழங்கல் 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (01.07.2024) நடைபெற்றது. 

  இந்த  கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,  சாலை வசதி  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 381 கோரிக்கை  மனுக்கள்  இன்று  பெறப்பட்டது.      

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.      தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழில் படிப்பு படிப்பதற்கான கல்வி உதவி தொகை ரூ.50,000-க்கான,

  காசோலையினை கிள்ளியூர் வட்டம் முள்ளங்கினாவிளை –வெள்ளங்கட்டிவிளை பகுதியைச் சேர்ந்த சிசில் என்பரின் மகன் சி.ஷைஜீ என்பவருக்கு வழங்கப்பட்டது.    

 இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்,  நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, உயர் அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News