குட்டையில் ஆண் சடலம் மீட்பு

திருப்போரூர் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-19 01:06 GMT

ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த பொன்மார் கிராமம், செல்லியம்மன் நகரில் கல்குட்டை உள்ளது. அங்கு ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று மாலை 3:00 மணிக்கு, தாழம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும், அவருக்கு 45 வயது இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். பிரதே பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசார்விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News