மேட்டூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.

சேலம் மாவட்டம், மேட்டூர் பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

Update: 2023-11-29 15:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம்,மேட்டூரில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ.6 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் பேருந்து நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது .

இந்த பேருந்து நிலையத்திற்கு முன்பு சாலையை ஆக்கிரப்பு செய்து சிலர் பெட்டி கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால் கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் சார்பாக பல முறை தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பேருந்து நிலையத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர். மீண்டும் இதே போல் இடையூராக கடைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News