டிராக்டர் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 15:16 GMT
கோப்பு படம்
திருத்துறைப்பூண்டி அருகே குறும்பல் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் திருத்துறைப்பூண்டி சாலையிலிருந்து மணலி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக டாக்டர் மீது மோதியதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.