சாலை விபத்து : ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் பலி

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒரே பைக்கில் சென்ற கடலூரை சேர்ந்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2024-05-02 07:10 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் இவ்விபத்தில் தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டதுடன் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News