வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

பொன்னமராவதி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2024-04-19 09:21 GMT

கொள்ளை 

 பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி ஆதியாவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(52). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் 2 நாட்களுக்கு முன்பு மறவாமதுரை ஊராட்சி சங்கம்பட்டியில் வீட்டின் பூட்டு உடைத்து 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News