காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் !!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி கூக்குரல் மூலம் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

Update: 2024-06-01 11:16 GMT

 மரக்கன்றுகள் நடும் திட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஈஷாவின் காவேரி கூக்குரல் மூலம் 4.75 லட்சம் மரக்கன்று கள் நடும் திட்டத்தை  சட்டப் பேரவை உறுப்பினர் டிகேஜி.நீல மேகம் தொடங்கி வைத்தார். ஈஷா தன்னார்வ அமைப்பு சார்பில், 2002-  ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவிரி நதியில் பசுமையை ஏற்படுத்த காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி வடி நிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்ப்பிடிப்பு திறனும் மேம்படும். ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் இந்த நிதியாண்டில் (2024-2025) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டந்தோறும் இதன் தொடக்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர் டிகேஜி.நீலமேகம் தலைமை வகித்து, மரக் கன்றுகளை நட்டு, நிகழ்வை தொடங்கி வைத்தார். மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் அமுத வடிவு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News