தென்கீரனூர் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
Update: 2023-12-01 19:15 GMT
மரக்கன்றுகள் நடவு
கள்ளக்குறிச்சி அடுத்த தென் கீரனூர் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மணி தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் செந்தில்குமார் மரக்கன்றுகளை நட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ் கல்வியாளர் செந்தில்குமார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.