படிக்க சொல்லி திட்டியதால் மாணவன் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;
Update: 2024-01-12 10:33 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம்,கழுகுமலை அருகே உள்ள ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (45). விவசாயி. இவருடைய மகன் சிவபாலன் (16), கழுகுமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 8-ந் தேதி சண்முகசுந்தரம், சிவபாலனை சரியாக படிக்குமாறு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவபாலன் வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவபாலன் நேற்று இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.