திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

சிவராத்திரி தோன்றிய தலமான திருவைகாவூர் வில்வனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-11 06:57 GMT

சிவராத்திரி 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் வில்வனேஸ்வரர் கோவில் சிவராத்திரி தோன்றிய தலமாகும். இக்கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய 4 கால பூஜை நடந்தது. உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் லட்சுமி, கணக்கர் கோபாலகிருஷ்ணன், மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News