சிறுதானிய உணவுத்திருவிழா

விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்றது

Update: 2023-12-06 15:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவுத்திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொது மக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுதானிய உணவு திருவிழா இன்று நடத்தப்பட்டது. இதில் சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் கல்லூரி மாணவிகளுக்கான போட்டியில் வே.வ.வன்னிய பெருமாள் கலை மற்றும் அறிவியல், வே.வ.வன்னிய பெருமாள் செவிலியர் கல்லூரி, ஸ்ரீவித்யா கல்லூரி மற்றும் வி.பி.எம்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 50 மாணவிகளும், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கான போட்டியில் 16 சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்களும், அங்கன்வாடி பணியாளர்களுக்கான போட்டியில் பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.4,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3000 பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Tags:    

Similar News