பேட்டை சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.

பரமத்தி வேலூர் பேட்டை சக்தி கண்ணூர் புது  மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2024-06-10 01:34 GMT

பேட்டை சக்தி கண்ணனூர் புது மாரியம்மன்

பரமத்தி வேலூர் பேட்டை சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் ஆலயத்தில் உள்ள மாரியம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு  பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் , திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும். பிரசாதமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News